Published : 30 Sep 2021 07:44 AM
Last Updated : 30 Sep 2021 07:44 AM
வட மாநிலங்களில் இருந்து, சரக்கு ரயில்களில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட் கள் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக வணிக வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்த ரயில்களில்வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வட மாநிலங்கள் வழியாக சென்னை ராயபுரத்துக்கு ஒரு சரக்கு ரயில் வந்தது. அந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ஏராளமான பார்சல்களில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களும், எலெக்ட்ரானிக் பொருட்களும் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வரித் துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். மொத்தம் 32 வாகனங்களில் இந்தப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன.
இவற்றை வடமாநிலங்களில் இருந்து அனுப்பியது யார், சென்னையில் யாருக்காக அனுப்பினர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT