Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM

மாணவர்கள் நலன் கருதி நவ.1-ம் தேதியில் இருந்து - 1 முதல் 8-ம் வகுப்பு வரை : பள்ளிகளை திறக்க அனுமதி : குறைதீர் கூட்டங்களும் நடத்தலாம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் அக்.31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாகவும் நவ.1-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதிக்கப்படுவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார்.

தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், செப்.30-ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊர டங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கரோனாவை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையை கருத்தில் கொண்டு தலைமைச் செயலகத் தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:

l எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக, கரோனா நோய்த் தொற்று பரவக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அக்டோபர் 31-ம் தேதி காலை 6 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

l சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல் பாடுகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடரும்.

l பெருமளவில் மக்கள் ஒன்று கூடக்கூடிய நாட்களாகிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

l பொதுமக்கள், தங்களது குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னை வந்து தலைமைச் செயலகத்தில் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக் கின்றனர். பொதுமக்களின் சிர மத்தை குறைக்கும் நோக்கில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், திங்கட் கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மாதந் தோறும் விவசாயிகள் குறைதீர்க் கும் நாள் ஆகியவற்றை கரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி நடத்த அனுமதிக்கப் படுகிறது.

l மருத்துவ நிபுணர்கள், கல்வி யாளர்கள், பெற்றோரின் ஆலோ சனைப்படி 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவிகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரி களும் இயங்கி வருகின்றன. அதேபோல், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவி யர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டி லேயே இருப்பது அவர்களி டையே பெரும் மனஅழுத்தத் தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ள தாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில், கரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்.

l மாவட்ட ஆட்சியர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப் படும் சிறப்பு தடுப்பூசி முகாம் களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

l கடைகளிலும், பொது மக்கள் கூடக்கூடிய இடங்களிலும் எதிர் வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, கை சுத்திகரிப்பான்கள் கட்டாயம் வைக்கப்பட வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

l கடை பணியாளர்கள், வாடிக்கை யாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

l அனைத்து கடைகளும் குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு கடைகளில், சமூக இடைவெளியை கடைப் பிடிக்கும் வகையில் ஒரேநேரத் தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது.

நோய்த்தொற்று கட்டுப்பாடு

l நோய்த் தொற்றுக்கு உள்ளான வர்கள், தொடர்பில் இருந்தவர் களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகியவை கண்டிப்பாக நடை முறைப்படுத்தப்படும்.

l நோய்க் கட்டுப்பாட்டு பகுதி களில், தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

l நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடு களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

l கரோனா நோய்த் தொற்று கட்டுப் பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல் களில் ஈடுபடுவர்களுக்கு அப ராதம் விதிக்கப்படும்.

எதிர்வரும் பண்டிகைக் காலத் தில் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறும் கூட்டம் கூடக் கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் உரிய கட்டுப்பாடுகளால் மட்டுமே கரோனா 3-வது அலையை தவிர்க்க இயலும் என்பதை உணர்ந்து அரசின் அனைத்து முயற்சிகளுக் கும் ஒத்துழைப்பு வழங்க வேண் டும். இவ்வாறு அதில் முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x