Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM
புதுடெல்லி தாத்ரா - நகர் ஹவேலி, டையு - டாமன், மத்திய பிரதேசம், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான 3 மக்களவைத் தொகுதிகள் தற்போது காலியாகவுள்ளன. அதேபோல, சட்டப்பேரவைத் தொகுதிகளை பொறுத்தவரை அசாமில் 5, மேற்கு வங்கத்தில் 4, மேகாலயா, இமாச்சலபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 3, ராஜஸ்தான், கர்நாடகா, பிஹார் ஆகிய மாநிலங்களில் தலா 2, ஆந்திரா, தெலங்கானா, மிசோரம், நாகாலாந்து, ஹரியாணா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 1 என மொத்தம் 30 தொகுதிகள் காலியாகவுள்ளன.
இந்நிலையில், தற்போது கரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, மேற்குறிப்பிட்ட 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்த மாநிலங்களில் தேர்தல் தொடர்பான பணிகள் சூடுபிடித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT