Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM

இந்தியாவில் 201 நாட்களுக்கு பின் 18,795-ஆக குறைந்த கரோனா பாதிப்பு :

இந்தியாவில் 201 நாட்களுக்குப் பின் நாடு முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,795 ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று காலை 9 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,795 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 201 நாட்களில் மிகக் குறைந்த பாதிப்பு எண்ணிக்கை ஆகும். இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,36,97,581 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் ஒரே நாளில் 179 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 193 நாட்களில் இது குறைந்த இறப்பு எண்ணிக்கையாகும். கேரளாவில் 58 பேரும் மகாராஷ்டிராவில் 32 பேரும் இறந்துள்ளனர்.

நாடு முழுவதும் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,47,373 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 26,030 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,58,002 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.81 % ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் கரோனா தொற்றுக்கு தற்போது 2,92,206 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 87,07,08,636 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 1,02,22,525 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x