Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM
சென்னை அயனாவரத்தில் இரு ரவுடி கும்பலுக்கு இடையில் நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வேலு என்பவர், தன்னை குண்டர்சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர், ‘‘ரவுடிகளால் போலீஸார் தாக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போதுநடக்கின்றன. எனவே, ரவுடிகளை ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்’’ என்று கூறினர்.
அப்போது, இதுதொடர்பாக புதிய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு உள்துறை கூடுதல் செயலரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘திட்டமிட்டகுற்றச் செயல் தடுப்பு சட்டம்’ என்றபெயரில் வரைவு மசோதா தயாராக இருப்பதாகவும், விரைவில் சட்டமாக இயற்றப்படும் எனவும்அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக அரசுக்கு பாராட்டுதெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக சட்டம் இயற்றினால் காவல்துறையினருக்கு பேருதவியாகஇருக்கும் என்று கூறி வழக்கை முடித்துவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT