Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM
வேளாண் சட்டத்தை எதிர்த்துநேற்று விவசாய அமைப்பினர் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுத்தனர். இதற்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா அரசுகள் ஆதரவு தெரிவித்தன. இதனால், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அரசு,தனியார் பஸ்கள், லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
திருப்பதியில் நேற்று காலை பஸ் நிலையம் எதிரே அம்பேத்கார் சிலை முன் கம்யூனிஸ்ட் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல், அரை நிர்வாண போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில் நெல்லூர், கடப்பா, அனந்தபூர், கர்னூல், குண்டூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் என 13 மாவட்டங் களிலும் மதியம் 1 மணி வரைபந்த் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதேபோன்று, தெலங்கானா விலும் பந்த் நடத்தப்பட்டது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT