Published : 28 Sep 2021 03:22 AM
Last Updated : 28 Sep 2021 03:22 AM
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வட்டார அளவில் நடந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி, கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முகாம் நடை பெற்றது. இதில், 147 பேர் பங்கேற்றனர். இவர்களில், 47 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற 43 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முகாமில் பங்கேற்ற மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விஸ்வநாதன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறாமல் இருந்தது தெரியவந்தது. இந்த தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்பேரில் சிறப்பு ஆம்புலன்ஸ் உதவியுடன் விஸ்வநாதன், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனை மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT