Published : 26 Sep 2021 03:24 AM
Last Updated : 26 Sep 2021 03:24 AM
இந்திய குடிமைப்பணிக்கு தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ளவர் களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று தனது ட்விட்டர் பதிவில், ‘‘அரசுநிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்திய குடிமைப்பணிக்குத் தமிழகத்தில் இருந்துதேர்வாகியுள்ள அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள். கோவையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ரஞ்சித் தேர்வு பெற்றதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.
தேர்ச்சி பெறாதோர் துவளவேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என்று நம்பி உழையுங்கள். வரும் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து தேர்வாகுவோர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அதற்குண்டான ஆதரவையும் உரிய பயிற்சியையும் தமிழக அரசுவழங்கும் என்ற உறுதியை அளிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT