Published : 26 Sep 2021 03:27 AM
Last Updated : 26 Sep 2021 03:27 AM

அரக்கோணம் தடத்தில் - மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் :

தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடக்கவுள்ளதால், அரக்கோணம் தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பேசின்பிரிட்ஜ் யார்டில் இன்றும், நாளையும் இரவு 11.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், சென்னை - அரக்கோணம் தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருத்தணி - சென்னை சென்ட்ரல் இரவு 9.30 மணி ரயில் இன்று ஆவடி வரையிலும், அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் இடையிலான இரவு 9.50 மணி ரயில் வரும் 28-ம் தேதியன்று திருவள்ளூர் வரையிலும் இயக்கப்படும். பட்டாபிராம் - சென்னை சென்ட்ரல் இரவு 10.45 மணி ரயில், திருத்தணி - சென்னை சென்ட்ரல் இரவு 9.45 மணி ரயில் வரும் 28-ம் தேதி ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x