Published : 24 Sep 2021 03:21 AM
Last Updated : 24 Sep 2021 03:21 AM

958 புள்ளி உயர்ந்துபுதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ் :

நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை புதிய உச்சத்தைத் தொட்டது. 958 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீட்டு எண் 59,885 ஆக நிலைகொண்டது. அதேபோல் தேசியப் பங்குச் சந்தையிலும் பெரும் ஏற்றம் கணப்பட்டது. 276 புள்ளிகள் உயர்ந்து நிஃப்டி குறியீட்டு எண் 17,823 ஆக நிலைகொண்டது. ஒட்டுமொத்த அளவில் சென்செக்ஸ் 1.63 சதவீதம் அளவிலும், நிஃப்டி 1.57 சதவீதம் அளவிலும் ஏற்றம் கண்டன.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவில் ஏற்றம் கண்டன. சென்செக்ஸில் பஜாஜ் ஃபின்சர்வ் முதலிடம் பெற்றது. அதன் பங்கு மதிப்பு 5.15 சதவீதம் உயர்வு கண்டது. அதைத் தொடர்ந்து எல் அண்ட் டி 3.46% உயர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x