Published : 24 Sep 2021 03:21 AM
Last Updated : 24 Sep 2021 03:21 AM

கரோனாவுக்குப் பிந்தைய உடல்நலப் பிரச்சினைகளுக்கான வழிகாட்டு விதிகள் :

புதுடெல்லி: கரோனா தொற்றில் இருந்து மீண்ட பலருக்கு மூச்சுத் திணறல், பித்தப்பையில் கோளாறு, மன நல ரீதியான பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கரோனாவுக்குப் பிந்தைய நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பாக மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் வழிகாட்டு விதிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘கரோனாவுக்கு பிந்தைய உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பாக மருத்துவர்களுக்கு வழிகாட்டும் வகையில் வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது மருத்துவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் உதவியாக இருக்கும். நோயாளிகளுக்கு பொருத்தமான சிகிச்சை அளிக்க அவர்களுக்கு இது உதவும்’’ என்று கூறியுள்ளார். சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறுகையில், ‘‘முன்களப் பணியாளர்கள் கரோனாவுக்குப் பிந்தைய உடல்நலப் பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்ளவும் முறையான பயிற்சி பெறவும் வேண்டும்். அதற்கு இந்த வழிகாட்டு விதிகள் உதவும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x