Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

தமிழகத்தில் புதிதாக 1,647 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 944, பெண்கள் 703 என மொத்தம் 1,647 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதிகபட்சமாக கோவையில் 218, சென்னையில் 198, ஈரோட்டில்112, செங்கல்பட்டில் 109 பேர்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 16,993 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

19 பேர் உயிரிழப்பு

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற் றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,379 ஆக உயர்ந்துள் ளது. சென்னையில் மட்டும் 8,450 பேர் இறந்துள்ளனர் என்றுதமிழக சுகாதாரத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x