Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

பியூஷ் கோயலுடன் உணவு அமைச்சர் சக்கரபாணி சந்திப்பு :

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த தமிழக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, உணவு மானிய நிலுவைத் தொகையை விரைவில் வழங்குமாறு கோரிக்கைவிடுத்தார். இதுகுறித்து தமிழகஉணவுத் துறை வெளியிட்டசெய்திக்குறிப்பு:

மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் நலம், உணவு,பொது விநியோகத் திட்ட அமைச்சர் பியூஷ் கோயலை, டெல்லி உத்யோக் பவனில் தமிழக அமைச்சர் அர.சக்கரபாணி சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்துக்கு வரவேண்டிய உணவுமானிய நிலுவைத் தொகை மற்றும் உணவுத் துறை குறித்தகோரிக்கைகளை வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின்போது, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, தமிழக கூட்டுறவு, உணவுத்துறை செயலர் முகமது நசிமுத்தீன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் வி.ராஜாராமன், தமிழக அரசின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஆசிஷ் சாட்டர்ஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x