Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

அலைபேசி விற்பனை கடையில் திருட்டு :

திருப்பூர்

திருப்பூரில் சென்னிமலை பேருந்து நிறுத்தம் அருகே ருத்ரமூர்த்தி (23) என்பவர் அலைபேசி விற்பனையகம் வைத்துள்ளார்.

கடந்த 20-ம் தேதி அதிகாலை கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 4 பேர் கொண்டகும்பல், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புதிய மற்றும் பழைய அலைபேசிகள், மடிக்கணினி போன்றவற்றை திருடிச் சென்றனர். போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச்சென்றுள்ளனர். புகாரின்பேரில் பல்லடம் போலீஸார் வழக்குபதிந்து, அருகில் இருந்த மற்றொரு கடையின் சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x