Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

திருப்பூரில் கரோனா கால நூல்கள் அறிமுகம் :

திருப்பூர் : திருப்பூர் மக்கள் மாமன்றத்தில், கரோனாவை மையமாகக் கொண்ட 4 நூல்களின் அறிமுக விழா நடந்தது.

திருப்பூர் யுவராஜ் சம்பத் எழுதிய ‘கொரானாவும் திருப்பூரும்’, உமர் பருக்கின் நாவல் ‘கோடிக்கால் பூதம்’, சென்னை கலைவாணனின் ‘கொரானா சிறுகதைகள்’, சுப்ரபாரதிமணியன் தொகுத்த 45 எழுத்தாளர்களின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் அடங்கிய நூலான ‘கொரானா காலம்’ ஆகிய நூல்களை, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அறிமுகப்படுத்தி பேசினார்.

நிகழ்வுக்கு, மக்கள் மாமன்றத்தின் சி.சுப்ரமணியம் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் நாமக்கல்நாதன், ஆழ்வைக்கண்ணன் ரத்னமூர்த்தி, மருத்துவர் முத்துச்சாமி, நாதன் ரகுநாதன், ஆலம், மதுராந்தகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் மாமன்றத்தில் விரைவில் அமையப்போகும் தமிழன்னை சிலைக்கு எழுத்தாளர்கள் நன்கொடை வழங்கினர். திருப்பூர் எழுத்தாளர்கள் சங்கமம் என்ற புதிய அமைப்பை, சி. சுப்ரமணியம் தலைமையில் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. நிகழ்வில், கவிதை வாசிப்பும், கருத்துரைகளும் இடம்பெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x