Published : 22 Sep 2021 03:05 AM
Last Updated : 22 Sep 2021 03:05 AM

செல்போன்கள் திருடிய இளைஞர் கைது :

சென்னை கிண்டியைச் சேர்ந்தலோகேஷ்வரன்(35), கடந்தஜூலை 27-ம் தேதி கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் சென்றபோது, அவரது செல்போன் காணாமல் போனது.

இதுகுறித்து தாம்பரம் இரும்புப்பாதை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதே நாளில்மண்ணிவாக்கத்தை சேர்ந்த குப்புசாமி என்பவரின் செல்போனும் காணாமல் போனது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தாம்பரம்ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்தபோது, அதில் ஒரு நபர் குப்புசாமியிடம் செல்போனை திருடிச் செல்வது தெரிந்தது. போலீஸாரின் தொடர் விசாரணையில் செல்போன் திருடியவர் ஜார்க்கண்ட் மாநிலம் இராம்புரா கிராமத்துக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் இந்த திருட்டில் ஈடுபட்ட கமந்தோ குமாரை(21) கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 40 நாட்களில் அவர்26 செல்போன்களை திருடியது தெரியவந்தது. போலீஸார் அவரிடமிருந்த 26 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x