Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில்ரூ.9,000 கோடி ஹெராயின் பறிமுதல் :

அகமதாபாத்: குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.9,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

குஜராத்தின் கட்ச் நகரில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் சரக்குகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, பெரிய கன்டெய்னர்களில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

இந்த போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஆந்திராவின் விஜயவாடாவில் அமைந்துள்ள ஆஷி டிரேடிங் நிறுவனத்தால் ஆப்கானிஸ்தானில் இருந்து முந்த்ரா துறைமுகத்திற்கு இந்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். டால்கம் பவுடர் என்ற பெயரில் ஹெராயின் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காந்தஹாரில் அமைந்துள்ள ஹாசன் ஹுசைன் லிமிடெட் நிறுவனம் இந்த ஹெராயினை அங்கிருந்து ஏற்றுமதி செய்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x