Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM

தாயைக் கொன்ற மகன் கைது :

சென்னை வேளச்சேரி நேருநகர் திருவீதி தெருவைசேர்ந்தவர் லட்சுமி. இவரது மகன் மூர்த்தி. கூலி தொழிலாளி.

மதுப் பழக்கம் உடைய மூர்த்தி, அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு தாயாரிடம் தகராறு செய்வாராம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த மூர்த்தி, மேலும் மது குடிக்க பணம் கேட்டு தாயாரிடம் தகராறு செய்துள்ளார்.

தன்னிடம் பணம் இல்லை என லட்சுமி தெரிவித்ததால் ஆத்திர\மடைந்த மூர்த்தி, அரிவாள் மனையால் லட்சுமியைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த லட்சுமி, அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த ராயப்பேட்டை போலீஸார் லட்சுமியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய மூர்த்தியை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x