Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM
வாடிப்பட்டி அருகே குட்டிக்கரடு பொன் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ரஞ்சித்(21). பால் வியாபாரியான இவர், 4 மாதங்களுக்கு முன்பு, ஒரு பெண்ணை காதலிப்பதாகப் பெற்றோரிடம் தெரிவித்தார். வேலைக்குச் சென்ற பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் எனப் பெற்றோர் அறிவுறுத்தினர்.
இதனால் விரக்தி அடைந்த ரஞ்சித் மலையடிவாரம் வேட்டை கருப்பன் கோயில் பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்தார். வாடிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT