Published : 20 Sep 2021 03:18 AM
Last Updated : 20 Sep 2021 03:18 AM
பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்கள் ஆகியவற்றை கடந்த வெள்ளிக்கிழமை முதல் மின்னணு ஏலத்தில் விடும் பணியை கலாச்சாரத்துறை அமைச்சகம் தொடங்கியது. இந்த ஏலத்தில் டோக்கியா ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள் பிரதமருக்கு வழங்கிய நினைவுப் பரிசுகளும் இடம் பெற்றுள்ளன.
முதல் நாளிலேயே ஒலிம்பிக், பாராலிம்பிக் வீரர்கள் வழங்கிய பொருட்கள் ரூ.10 கோடிக்கு மேல் ஏலம் கேட்கப்பட்டிருந்தன. வரும் அக்டோபர் 7ம் தேதி வரை நடைபெறும் இந்த மின்னணு ஏலம் மூலம் கிடைக்கும் பணம், கங்கை நதியை பாதுகாக்கும் மற்றும் புதுப்பிக்கும் நமாமி கங்கை திட்டத்துக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “காலப்போக்கில் நான் பெற்ற ஏராளமான அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகள் தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளன. நமது ஒலிம்பிக் போட்டியின் நாயகர்கள் வழங்கிய சிறப்பு நினைவுப் பரிசுகளும் இதில் அடங்கும். இந்த ஏலத்தில் கலந்து கொள்ளுங்கள். இதன் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கை முன்முயற்சி திட்டத்துக்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT