Published : 20 Sep 2021 03:18 AM
Last Updated : 20 Sep 2021 03:18 AM

உள்நாட்டு மின் உபகரணங்கள் சந்தை ஆண்டுக்கு 12 சதவீதம் வளர்ச்சி அடையும் :

உள்நாட்டு மின் உபகரணங்கள் சந்தை ஆண்டுக்கு 12 சதவீதம் வளர்ச்சி அடையும் என்றும் 2025-ம் ஆண்டில் அதன் சந்தை 72 பில்லியன் டாலராக வளர்ச்சி அடைந்திருக்கும் என்றும் இந்திய மின் மற்றும் மின்னணு உபகரணங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் சபோ தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவின் உள்நாட்டு மின் உபகரணங்கள் சந்தை 50 பில்லியன் டாலராக உள்ளது. இது அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆண்டுக்கு 12 சதவீதம் வளர்ச்சி காணும். 2025ம் ஆண்டில் உள்நாட்டு மின் உபகரணங்களின் சந்தை 72 பில்லியன் டாலராக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

அதேபோல் ஏற்மதியும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார். தற்போது மின் உபகரணங்கள் ஏற்றுமதி 8.62 பில்லியன் டாலராக உள்ளது. அது அடுத்த நான்கு ஆண்டுகளில் அது 13 பில்லியன் டாலராக உயரும் என்று அவர் தெரிவித்தார்.

உலக நாடுகள் தற்போது மின் உபகரணங்களை வாங்குவதற்கு சீனாவுக்கு அடுத்ததாக இந்தியாவை நாடி வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியா அதன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை அடைவதற்கு உள்நாட்டு மின் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x