Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
7 மாவட்டங்களில் செயல்படும் அரசு இசைப் பள்ளிகளில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளில், 3 ஆண்டு பயிற்சிக்கான சேர்க்கை தற்போது நடைபெறுகிறது.
ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 13 முதல்25 வயதுக்குள் இருப்போர் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.120. இதில் சேருவோருக்கு மாதம் ரூ.400 வீதம், ஆண்டுக்கு 10 மாதங்கள் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பேருந்து பயணச் சலுகையும் உண்டு. கூடுதல் விவரங்களை https://www.artandculture.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும், அரசு இசைப் பள்ளிகளுக்கு சென்றும் அறிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT