Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM
ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்காலிக இடத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்து மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை முடித்து, மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் 11 மருத்துவக் கல்லூரிகளில் 1,650 மாணவர்கள் சேரவுள்ளனர். இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு என 50 மாணவர்களை சேர்த்து, வாடகைக் கட்டிடம் எடுத்து படிக்க வைப்பது என்பது மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் பெருமைக்கு உகந்ததாக இருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT