Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

ராஜபாளையம் அருகே : 84 டன் கடத்தல் நெல் பறிமுதல் :

ராஜபாளையம் அருகே முதுகுடிக்கு வந்த லாரிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குரிய நெல் கடத்தப்படுவதாக வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரும், தனி வட்டாட்சியர் ராமநாதன் உள்ளிட்ட வருவாய்த் துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று லாரிகளை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். 5 லாரிகளில் 84 டன் நெல் இருந்தது. நெல் மூட்டை களையும், லாரிகளையும் பறி முதல் செய்தனர்.

விசாரணையில், சங்கரன்கோவில் அருகே பாவூர்சத்திரத்திலிருந்து திருமலாபுரத்தைச் சேர்ந்தவர்கள் நெல் மூட்டைகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x