Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

மின்னல் தாக்கி பெண் மரணம் :

கமுதி

கமுதி அருகே மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் நேற்று கனமழை பெய்தது. அப்போது நிலத்தில் பருத்தி பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பாக்கியராஜ் மனைவி முத்துலட்சுமி (35), நாகச்செல்வம் மனைவி கற்பகவல்லி (32), சண்முகம் மனைவி அருணாச்சலம் (42) ஆகியோர் மீது மின் னல் தாக்கியதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். அருகிலிருந்தோர் மூவரையும் மீட்டு கமுதி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இதில் செல்லும் வழியில் கற்பகவல்லி உயிரிழந்தார். படுகாயமடைந்த முத்துலட்சுமி, அருணாச்சலம் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கோவிலாங்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x