Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

தி.மலை மாவட்டத்தில் 75,182 பேருக்கு கரோனா தடுப்பூசி :

தி.மலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்த ஆட்சியர் பா.முருகேஷ்.

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் கடந்த 12-ம் தேதி 1,004 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதில் 1,04,325 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுப்பட்டு புதிய மைல் கல் எட்டப்பட்டது. இதன்மூலம், 52 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் 1,004 இடங்களில் ‘மீண்டும்’ மெகா சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, காலை 7 மணி முதல் தடுப்பூசி செலுத்தும் நடைபெற்றது. தடுப்பூசி செலுத்தும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

தி.மலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட சில இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமை ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, நகராட்சி ஆணையாளர் சந்திரா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி, 2-வது கட்டமாக நடைபெற்ற மெகா சிறப்பு முகாமில், தி.மலை சுகாதார மாவட்டத்தில் 40,898 பேரும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 34,284 பேரும் என மொத்தம் 75,182 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x