Published : 19 Sep 2021 03:14 AM
Last Updated : 19 Sep 2021 03:14 AM

வில்லியனூர் அருகே அடுத்தடுத்த 2 கடைகளில் பணம், பொருட்கள் திருட்டு :

புதுச்சேரி மாநிலம் வில்லி யனூர் அடுத்த அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40), அப்பகுதியில் மளிகைக்கடை வைத் துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். மீண்டும் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு திடுக்கிட்டார்.

உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்க பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இவரது கடையையொட்டி திலாசுப் பேட்டையில் வசிக்கும் வெங்கடேஷ் (35) என்பவர் போட்டோ ஸ்டியோ வைத் துள்ளார். திருமண ஆர்டர் வேலை நிமித்தமாக சில நாட்களாக கடை பூட்டப்பட்டு இருந்தது.

இவரது கடையையும் நள்ளிரவு உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த விலையுயர்ந்த கேமரா, பிரிண்டர், மெமரிகார்டு, பென் டிரைவ் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர். இதுபற்றி வில்லியனூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலை மையிலான போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து கோவிந்தராஜ், வெங்கடேஷ் இருவரும் தனித் தனியே அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x