Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM

விருதுநகரில் செப்.25-ல் சிறுதானிய உணவு போட்டி :

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு விருதுநகர் அரசு அருங்காட்சியகம் மற்றும் சிவகாசி பெல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இணைந்து வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்கு சிறுதானிய உணவுப் போட்டியை நடத்துகின்றன.

இதுகுறித்து விருதுநகர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் கூறுகையில், விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் இப்போட்டி நடைபெறும். சிறுதானியத்தை கொண்டு 2 வகை காரம் மற்றும் 2 வகை இனிப்பு செய்ய வேண்டும்.

போட்டியாளர்கள் தங்கள் இல்லத்திலேயே செய்து கொண்டு வந்து பங்கேற்கலாம்.

பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் 9443671084, 9500925180 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x