Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM

வாக்குச்சாவடி மையங்களில் இன்று மீண்டும் கரோனா தடுப்பூசி முகாம் :

மதுரை மாவட்டத்தில் கரோனா பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் உட்பட மொத்தம் 1,150 இடங்களில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம் கடந்த 12-ம் தேதி நடந்தது. இந்த இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மீண்டும் நடக்கிறது.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 18 வயது நிரம்பியவர்களும், இரண்டாவது தடுப்பூசி போட வேண்டியவர்களும் இம்முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x