Published : 18 Sep 2021 03:12 AM
Last Updated : 18 Sep 2021 03:12 AM
சோழவரம் அருகே பள்ளியில் மயங்கி விழுந்து 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள புதிய எருமைவெட்டிபாளையம் அடுத்த தேவனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தர். இவரது மகன் கணேஷ்(15), புதிய எருமைவெட்டிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற கணேஷ், மதியம் 3 மணியளவில் வகுப்பறையில் திடீரென்று மயங்கி விழுந்தார்.
உடனே ஜனப்பன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், கணேஷ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, சோழவரம்போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT