Published : 18 Sep 2021 03:13 AM
Last Updated : 18 Sep 2021 03:13 AM

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர் குத்திக் கொலை, அண்ணன்- தம்பி கைது :

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி டி.எம்.பி. காலனி6-வது தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் (45). ஆட்டோ ஓட்டுநர். இவரும், உறவினரான தூத்துக்குடி திம்மையார் காலனியைச் சேர்ந்த ஆறுமுகம்(31) என்பவரும் நேற்று திம்மையார் காலனி பகுதியில் வைத்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையேவாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஆறுமுகம், மையவாடி அருகே நிறுத்தப்பட்டிருந்த சிவபெருமாளின் ஆட்டோவை அடித்து சேதப்படுத்தினாராம்.

இதனால் ஆறுமுகத்தை சிவபெருமாள் தாக்கியுள்ளார். பதிலுக்கு சிவபெருமாளை ஆறுமுகமும், அவரது தம்பி சொர்ணராஜும் சேர்ந்து தாக்கியுள்ளனர். அப்போதுகத்தியால் சிவபெருமாள் குத்தப்பட்டார். இதில் பலத்த காயம்அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிவபெருமாள் இறந்தார்.

இதையடுத்து ஆறுமுகம், சொர்ணராஜ் இருவரையும் அங்கு நின்ற பொதுமக்கள் துரத்திச் சென்றனர். கல் வீசி தாக்கப்பட்டதில் இருவரும் காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் விசாரணை நடத்தி, சிவபெருமாளை கொலை செய்ததாக ஆறுமுகம், சொர்ணராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x