Published : 18 Sep 2021 03:14 AM
Last Updated : 18 Sep 2021 03:14 AM
திருவண்ணாமலை: சலவைத் தொழிலாளர்கள் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாள் விழா திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது.
அற்புதவள்ளி தலைமை வகித்தார். ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். இளமதி வரவேற்றார். பெரியாரின் வாழ்வியல், பெரியாரின் போராட்டம், பெண் விடுதலை குறித்து எழுத்தாளர் பிரச்சன்னபாரதி உரையாற்றினார். பெரியார் குறித்த பாடல்களை நாட்டுப்புற பாடகர் சுப்ரமணி பாடினார். சலவைத் தொழிலாளர்கள் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் த.ம.பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், குப்பு நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT