Published : 18 Sep 2021 03:14 AM
Last Updated : 18 Sep 2021 03:14 AM
திருவண்ணாமலை: தி.மலையில் உள்ள அண்ணாமலையை பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் கரோனா தொற்று காராணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த தடை உத்தரவு, 19-வது மாதங்களாக புரட்டாசி மாத பவுர்ணமியிலும் தொடர்கிறது. இதுகுறித்து ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால், வரும் 20-ம் (திங்கள்கிழமை) காலை 5.20 மணியில் இருந்து 21-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 5.51 மணி வரை உள்ள பவுர்ணமி நாளில் அண்ணாமலையை சுற்றி கிரிவலம் செல்வதற்கு அனுமதி கிடையாது. எனவே, தி.மலை மற்றும் வெளி மாவட்ட, மாநில பக்தர்கள், பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு வர வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT