Published : 17 Sep 2021 03:10 AM
Last Updated : 17 Sep 2021 03:10 AM
ஜப்பானின் புனாபாஷி அரினாவில் நடைபெறும் ஆசிய வாலிபால் தொடரின் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய ஆடவர் அணி,பக்ரைன், கத்தார், ஜப்பான் ஆகிய அணிகளிடம் தோல்வியடைந்தது. இதனால் கால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
இந்நிலையில், 9 முதல் 16-வது இடத்துக்குள் ஏதேனும் ஒன்றை பிடிப்பதற்கு போராடும் நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. இந்த வகையில் ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி, நேற்று குவைத்தை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியா 25-20, 25-20, 25-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானுடன் இன்று மோதுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT