Published : 17 Sep 2021 03:11 AM
Last Updated : 17 Sep 2021 03:11 AM

மனைவியை கொலை செய்த கணவர் கைது :

ஆனந்தகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் ஆனந்தகுமார் மது அருந்தி விட்டு வீட்டுக்குச் சென்றார். அப்போது மனைவி செல்வியுடன் தகராறு ஏற்பட்டது. கோபத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவி செல்வியின் கழுத்தில் ஆனந்தகுமார் குத்தியுள்ளார். படுகாயமடைந்த செல்வி உயிருக்கு போராடினார். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிச் சென்று செல்வியை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் ஆனந்தகுமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தனியார் மருத்துவமனையில் செல்வியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. துடியலூர் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து, சரவணம்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த ஆனந்தகுமாரை நேற்று அதிகாலை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x