Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

வீரபத்திர சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா :

தண்டராம்பட்டு அடுத்த கொழுந்தம்பட்டு கிராமத்தில் உள்ள  அகோர வீரபத்திர சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கொழுந்தம்பட்டு கிராம குளக்கரையில்  அகோர வீரபத்திர சுவாமி கோயில் புதிதாக கட்டப்பட்டது. இதையடுத்து, கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, யாக பூஜைகள் உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றன. பின்னர், அகோர வீரபத்திர சுவாமி கோயில் கோபுரம் மீது நேற்று காலை புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.இதில், கொழுந்தம்பட்டு மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x