Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM
வேலூர்: வேலூர், இறைவன்காடு துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என வேலூர் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மற்றும் இறைவன்காடு துணை மின் நிலையங்களில் நாளை (18-ம் தேதி) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட வேலூர் புதிய பேருந்து நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், வேலூர் டவுன், பஜார், சலவன்பேட்டை, அண்ணா சாலை, கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண்பாக்கம், வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், செதுவாலை, கந்தநேரி, மருதவல்லிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT