Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் : 2-வது நாளில் : 323 பேர் மனு தாக்கல் :

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக் கான வேட்பு மனு தாக்கல் 2வது நாளில் 323 பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 34 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 2-ம் நாளான நேற்று ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 83 பேரும், கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 235 பேர் என மொத்தம் 323 பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நேற்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x