Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM
இந்திய தொழில் வர்த்தக சபை(எஃப்ஐசிசிஐ) சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான இணையவழி கருத்தரங்கில் மத்திய அறிவியல் மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்துகொண்டு பேசியதாவது:
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்கரோனா வைரஸ் பெருந்தொற்றுகாரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது 2022-ம் ஆண்டு இறுதியிலோ அல்லது 2023-ம்ஆண்டு தொடக்கத்திலோ இந்த திட்டத்தை செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும். அனைத்து துறைகளிலும் விண்வெளி தொழில்நுட்பத்தின் பங்கு நிச்சயம் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT