Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM

ஆழியாறு அணையிலிருந்து 11 மதகுகள் வழியாக உபரிநீர் திறப்பு :

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையிலிருந்து 11 மதகுகள் வழியாக திறக்கப் பட்ட உபரிநீர்.

பொள்ளாச்சி: ஆழியாறு அணை நிரம்பியதால், 11 மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள ஆழியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான மேல்ஆழியாறு மின் உற்பத்தி நிலையத்திலிருந்து விநாடிக்கு 2400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டம் மொத்தமுள்ள 120 அடியில் 119.70 அடியை நேற்று எட்டியது.

இதனைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு அணையில் உள்ள 11 மதகுகளும் திறக்கப்பட்டு விநாடிக்கு 1815 கனஅடி உபரி நீரும், பொள்ளாச்சி கால்வாய் வழியாக 200 கன அடி தண்ணீரும், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் வழியாக 81 கன அடி தண்ணீரும் மற்றும் மின் உற்பத்தி நிலையம் வழியாக ஆற்றுப்படுகையில் 485 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆழியாறு ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களுக்கு வருவாய் துறையின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தண்ணீர் திறப்பை கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா, உதவி பொறியாளர் அசோக்குமார், கார்த்திக் கோகுல் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கண்காணித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x