Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM
கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், தாட்கோவுடன் இணைந்து, கோவை பாலசுந்தரம் சாலையில், ரூ.1 கோடியே10 லட்சம் மதிப்பில், பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கான விடுதிகட்டி முடிக்கப்பட்டு பயன்பாட் டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தங்கும் விடுதி 5,193 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 13 அறைகள் உள்ளன. ஒரு அறையில் 4 பேர்தங்கலாம். ஆதி திராவிடர் மற்றும்பழங்குடியினத்தைச் சேர்ந்த பணிபுரியும் பெண்கள் இங்கு தங்கலாம். அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இங்கு காப்பாளர், பாதுகாவலர், சமையலர், உதவியாளர், தூய்மைப் பணியாளர் என 6 பணியிடங்கள் ஏற்படுத்த அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT