Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM

தம்பதியிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது : போலீஸாருக்கு காவல் ஆணையர் பாராட்டு : திருப்பூர்:திருப்பூர் குருவாயூரப்பன் நகர் முத்தணம்பாளையத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி தேன்மொழி. இருவரும், கடந்த 9-ம்தேதி கேத்தம்பாளையம் ஜே.வி.டேப்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், தேன்மொழியிடம் இருந்து கைப்பையை பறித்துக்கொண்டு தப்பினார். கைப்பையில் ரூ.11 லட்சத்து 12 ஆயிரம் இருந்தது. புகாரின்பேரில் அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து, மர்மநபரை தேடி வந்தனர். இவ்வழக்கு தொடர்பாக க

இதுகுறித்து திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா செய்தியாளர் களிடம் கூறும்போது ‘‘வழிப்பறி சம்பவம் நடந்த 3 நாட்களுக்குள் குற்றவாளியை போலீஸார் பிடித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகை, தொடர்புடையவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட தனிப்படை காவலர்களை பாராட்டி வெகுமதி வழங்கப்பட்டுள்ளது'’ என்றார். அப்போது, காவல் துணை ஆணையர்கள் பெ.ரவி, அரவிந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x