Published : 16 Sep 2021 03:13 AM
Last Updated : 16 Sep 2021 03:13 AM
காரைக்கால்: காரைக்காலில் உள்ள உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் அலுவலக வாயிலில் நேற்று உள்ளாட்சி அமைப்புகளின் ஒய்வூதியதாரர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளாட்சி ஓய்வூதியதாரர்களுக்கு அரசே நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள மாத ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
காரை மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கத் தலைவர் ஜெயராம் தலைமை வகித்தார். இதில், ஓய்வூதிய தாரர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT