Published : 16 Sep 2021 03:13 AM
Last Updated : 16 Sep 2021 03:13 AM
காரைக்காலில் பல்வேறு திட்டப் பணிகளை புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
காரைக்கால் கடற்கரை சாலை, கீழகாசாகுடியில் அம்ரூத் திட்டத்தின் மூலம் 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 அடுக்கு குடிநீர்த் தொட்டி கட்டும் பணி, திருநள்ளாறில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆன்மிக பூங்கா அமைக்கும் பணி, தர்பாரண்யேஸ்வரர் கோயிலைச் சுற்றி தேரோடும் வீதிகளில் வடிகால் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு செய்தார்.
அப்போது, காரைக்கால் கடற்கரை சாலையை அழகுப் படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். அரசலாற்றின் முகத்துவாரத்தை நன்கு ஆழப்படுத்தி, படகுகள் சிரமமின்றி சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநள்ளாறில் ஆன்மிகப் பூங்கா அமைக்கும் பணிகளையும், வடிகால் கட்டுமானத்தையும் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, எம்எல்ஏ பி.ஆர்.சிவா, ஆட்சியர் அர்ஜூன் சர்மா, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT