Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டுக்கான மூலதன செலவுஇலக்கை எட்டியுள்ள 11 மாநிலங்களுக்கு, கூடுதலாக ரூ.15,721 கோடி கடன் பெற மத்திய நிதிஅமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
2021-22-ம் நிதி ஆண்டின் முதல்காலாண்டுக்கு மத்திய நிதி அமைச்சகம் நிர்ணயித்த மூலதனசெலவு இலக்கை ஆந்திரப் பிரதேசம், பிஹார், சத்தீஸ்கர், ஹரியாணா, கேரளா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலாயா, நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும்உத்தராகண்ட் ஆகிய 11 மாநிலங்கள் எட்டியுள்ளன.
இந்நிலையில், இம்மாநிலங்களுக்கு ஊக்கத்தொகையாக, கூடுதலாக ரூ.15,721 கோடி கடன்பெற மத்திய நிதி அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
மாநிலங்கள் உள்கட்டமைப்புத் தொடர்பாக மேற்கொள்ளும் செலவினங்கள் மூலதன செலவினங்களில் அடங்கும். ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் மூலதன செலவினம் தொடர்பாக நிதி ஒதுக்கப்படும்.
அந்த மூலதன செலவு இலக்கில் அந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 15 சதவீதத் தையும், இரண்டாம் காலாண்டின் முடிவில் 45 சதவீதத்தையும், மூன்றாம் காலாண்டின் முடிவில் 70 சதவீதத்தையும், 4-ம் காலாண்டின் முடிவில் 100 சதவீதத்தையும் எட்டும் மாநிலங்களுக்கு கூடுதல்கடன் பெற அனுமதி வழங்கப்படும். மூலதன செலவினம்தொடர்பான அடுத்த மதிப்பீடு இவ்வாண்டு டிசம்பர் மாதம் நடைபெறும்.
அப்போது செப்டம்பர் மாதம் வரையில் மேற்கொள்ளப்பட்ட மூலதன செலவினங்கள் மதிப்பிடப்படும். அதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியிருக்கும் மாநிலங்களுக்கு கூடுதல் கடன் பெற அனுமதி வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT