Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM
பிரதமர் மோடி பிறந்ததினத்தை சிறப்பாக கொண்டாடுவது தொடர் பாக புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத்தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். அமைச்சர் சாய் சரவணக்குமார், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், அசோக்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பிரதமர் மோடி பிறந்த தினமான செப்டம்பர் 17 தொடங்கி அக்டோபர் 7-ம் தேதி வரை 21 நாட்களுக்கு மக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. பிரதமரின் பல்வேறு திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்வது,கிராமக் குளங்களைத் தூர் வாருவது, மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட பல பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் துணைத் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், தொகுதி தலைவர்கள் அணித்தலைவர்கள் பிரிவு அமைப் பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT