Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த - போலீஸ்காரரின் இறுதி ஊர்வலம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு :

காஷ்மீரின் குப்வாரா மாவட் டம் கல்முனா கிராமத்தைச் சேர்ந் தவர் 25 வயதான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஷத் அகமது மிர். இவர் நகரிலுள்ள கன்யார் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு விசாரணை கைதியை அழைத்துச் சென்று திரும்பும் போது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் நேற்று பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில் அவரது உடல் கல்முனா கிராமத்துக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் கூறும்போது, “திறமையான, வீரமிக்க இளம் போலீஸ் அதிகாரியை நாங்கள் இழந்துவிட்டோம். கைது செய்யப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று திரும்பிய போது அவரை தீவிரவாதிகள் சுட்டுள்ளனர். அவரது கொலைக்குக் காரண மானவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப் படுவர். அர்ஷத் அகமது கடந்த ஆண்டுதான் காவல் துறையில் சேர்ந்தார். கடந்த சில மாதங் களுக்கு முன்புதான் கன்யார் போலீஸ் நிலையத்தில் அவர் பணியில் சேர்ந்தார். அவரது பணித்திறனை நாங்கள் என்றும் மெச்சுவோம்” என்றார்.

இதனிடையே அர்ஷத் அகமதுவை தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் மூலம் கொலையாளிகளை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x