Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM
கர்நாடக மாநிலம் உடுப்பி யில் கடந்த 1941-ம் ஆண்டு பிறந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ், எல்ஐசி ஊழியராக தனது வாழ்க்கையை தொடங்கினார். தனது எளிமையான அணுகுமுறை மற்றும் அறிவு கூர்மையால் 1975-ல் எல்ஐசி ஊழியர் சங்க செயலாளர் ஆனார்.
இதனால் காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கமான ஆஸ்கர் பெர்னாண்டஸூக்கு 1980-ம் ஆண்டு இந்திரா காந்தி சிக்கோடி வந்த போது அவரது நேரடி அறிமுகம் கிடைத்தது. இதனால் அதே ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் உடுப்பி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தேடி வந்தது.
தேர்தலில் வெற்றி பெற்ற ஆஸ்கர் பெர்னாண்டஸ், இந்திரா, ராஜீவ் காந்திக்கு நெருக்கமானார். கர்நாடக காங்கிரஸ் தலைவராகவும் நிய மிக்கப்பட்டார். நான்கு முறை மக்களவைக்கும், 3 முறை மாநிலங்களவைக்கும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்கர் பெர்னாண்டஸ், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசில் மத்திய புள்ளியியல் துறை, தொழிலாளர் நலத் துறை, சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
மங்களூருவில் குடும்பத் தினருடன் வசித்த நிலையில் கடந்த ஜூலை 19-ம் தேதி வீட்டில் உடற்பயிற்சி செய்த போது தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கோமா நிலைக்குசென்றுவிட்டதாக மருத்துவ மனை தெரிவித்தது.
இந்நிலையில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் நேற்று காலமா னார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT