Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

கர்நாடகாவில் : ஜீப் விபத்தில் : 8 பேர் உயிரிழப்பு :

கர்நாடக மாநிலம், சிக்க பள்ளாப்பூர் மாவட்டம், சீனிவாச புராவை சேர்ந்த ராஜப்பா (42) என்பவர் நேற்று முன்தினம் தனது உறவினர்கள் 14 பேருடன் ஜீப்பில் சிந்தாமணி நோக்கி சென்று கொண்டிருந்தார். மாரிநாயக்கனஹள்ளி அருகே ஆந்திராவில் இருந்து வந்த லாரி மீது ஜீப் வேகமாக மோதியது.

இதில் ராஜப்பா (42), அவரது மனைவி மோனிகா (35), ஜீப் ஓட்டுநர் முனி கிருஷ்ணா (37), நிகில் (30), நாராயணப்பா (55), முனிரத்னம்மா (49) ஆகிய 6 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். லட்சுமியம்மா (43), வெங்கடம்மா (45) ஆகியோர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிந்தாமணி போலீ ஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x