Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM
கடந்த ஆண்டு கரோனா முதல் அலை பரவியபோது, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்கள் முழு அளவில் செயல்படாததால், மாநில மின் வாரியங்களுக்கு நிதி நெருக்கடி அதிகரித்தது.
இதையடுத்து, மாநில மின் வாரியங்களுக்கு உதவும் வகையில், சிறப்புக் கடன் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்று, மின் விநியோகம் செய்த நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க தமிழக மின் வாரியம் முடிவு செய்தது.
இதற்காக மத்திய அரசின் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் ரூ.12,400 கோடியும், ரூரல் எலக்ட்ரிபிகேஷன் நிறுவனத்திடம் ரூ.17,800 கோடியும் கடன் கேட்டது. இதையடுத்து, அந்த நிறுவனங்களும் கடன் தொகையில் 50 சதவீதத்தை வழங்கியுள்ளன. மீதி கடன் தொகையை இன்னும் வழங்கவில்லை.
இந்நிலையில், மத்திய அரசின் ரூரல் எலக்ட்ரிபிகேஷன் நிறுவன அதிகாரிகளுடன், தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, நிலுவையில் உள்ள 50 சதவீத கடன் தொகையை விரைந்து வழங்குமாறு, தமிழக மின் வாரிய அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT